மனோகர் பாரிக்கர் உடல் நிலை பாதிப்பு – தனியார் மருத்துவமனையில் அனுமதி

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவா முதலமைச்சராக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதத்துக்கு பிறகு இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டார்.

இந்நிலையில், தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 

Exit mobile version