கோவா முதலமைச்சர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றார். கடந்த ஜூன் மாதம் சிகிச்சை முடிந்து, அவர் இந்தியா திரும்பினார். பின்னர் மீண்டும் இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்ட அவர், கடந்த வாரம் நாடு திரும்பினார். இந்தநிலையில், மனோகர் பாரிக்கருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோவா மாநில துணை சபாநாயகரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் லோபோ, மருத்துவமனைக்கு சென்று மனோகர் பாரிக்கரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version