ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ,அக்டோபர் 25-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, தொழிலதிபர்கள் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் மீது சட்ட விரோதமாக நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் 24 நாள்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ப.சிதம்பரத்திடமும் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டதால் , அவர் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 25-ஆம் தேதி நீட்டித்து நீதிபதி முக்தா குப்தா உத்தரவிட்டார்.

Exit mobile version