பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலி

சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனியார் பேருந்து ஒன்று, ஓமலூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. மாமாங்கம் அருகே சென்றபோது, பழுதாகி நின்ற மினி லாரியின் மீது தனியார் பேருந்து மோதி, எதிரே வாகனம் வரும் சாலையின் குறுக்கே சென்றது. அப்போது, பெங்களுரூவில் இருந்து பாலக்காடு செல்லவதற்காக, சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது, நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version