பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலை பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு அதிமுக அரசு குரல் கொடுத்து வருவதை சுட்டிக் காட்டினார். அவர்களை விடுதலை செய்வதில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Exit mobile version