பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த தினம் – முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணவின் 110வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தநிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கட்சியின் மூத்தத் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version