பெங்களூரு – ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.

 

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு – ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணி வெற்றி பெறும் என அனைவரும் நினைத்திருந்த வேளையில் , கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ சிடோன்சா கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெங்களூரு அணியில் நிஷூ குமாரும், சுனில் சேத்ரியும் கோல் அடித்தனர்.

Exit mobile version