புதிய பாலம் திறப்பு விழாவில் பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சியினர் மோதல்

டெல்லியில் புதிய பாலம் திறப்பு விழாவின்போது பா.ஜ.க-வினரும், ஆம் ஆத்மி கட்சியினரும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் புதிதாக கட்டுப்பட்டுள்ள Signature பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க மாநில தலைவர் மனோஜ் திவாரி சென்றுள்ளார். அப்போது ஆம் ஆத்மி கட்சியினருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனிடையே போலீஸாருடன் மனோஜ் திவாரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

 

Exit mobile version