புதிய உச்சம்- ரூ.85-ஐ தாண்டியது பெட்ரோல், டீசல் விலை

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, இன்று ரூ.85-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது குறைந்து வந்தபோது, கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84 ரூபாய் 49 காசுகள் என்று இருந்தது. நேற்று மீண்டும் லிட்டருக்கு 36 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 85 காசுகள் என விற்பனையானது. இந்தநிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 85 ரூபாய் 15 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 94 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை ரூ.85-ஐ தாண்டியுள்ளநிலையில், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Exit mobile version