பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க பின்பற்றப்படும் நடவடிக்கை என்ன? : மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை ஆணையர் சுற்றறிக்கை

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதற்கு பின்பற்றப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் அடிப்படையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்றும், அதில் எத்தனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், எத்தனை மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும், பின்பற்றப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருவாய்த்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Exit mobile version