"பிரதமர் மோடி துரோகம் இழைத்து விட்டார்" – ராகுல்காந்தி

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்திய அரசின் ஆலோசனைப்படி அம்பானி நிறுவனத்திடம் இருந்து பிரான்ஸ் ஒப்பந்தம் கோரியதாக, முன்னாள் அதிபர் ஹோலாந்தே கூறி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தனக்கு வேண்டியவர்களுக்காக ரகசியமாக செயல்பட்டதை, ஹோலாந்தே அம்பலப்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அம்பானி நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை பெற்று தந்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.

இதன் மூலம் இந்தியாவுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பிரதமர் மோடி மிகப்பெரிய துரோகத்தை இழைத்து விட்டதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Exit mobile version