பாலியல் தொல்லைகளை அரசு பொறுத்துக் கொள்ளாது – மேனகா காந்தி

 

பாலியல் தொல்லைகளை அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம், இந்தி நடிகை தானுஸ்ரீ தத்தா மீதான பாலியல் தொல்லை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர், மகளிருக்கு எதிரான புகார்கள் பெற சமூக ஊடகங்களில் மகளிர் பெட்டி தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

இதேபோல், “இந்தியாவில் எனக்கும்” என்ற பெயரில் புகார் பெட்டியை தொடங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், எந்த துறையில் பணியாற்றும் மகளிர் ஆனாலும், அவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

Exit mobile version