பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன்

நாடு முழுவதும் மீ- டூ விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன். இவர் தனது முகநூல் பக்கத்தில், நடிகர் தியாகராஜன் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2011-ம் ஆண்டு கோவையில் பொன்னர் சங்கர் படட்பபிடிப்பின் போது தான் புகைப்பட கலைஞராக பணியாற்றியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

நள்ளிரவில் தான் தங்கியிருந்த அறையின் கதவை தியாகராஜன் தட்டி தொல்லை கொடுத்தாக பிரித்திகா மேனன் கூறியுள்ளார். அவரது ஆசைக்கு இணங்க மறுத்த காரணத்தால் படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி, அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிஹரன் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியுருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version