பாட்னா பைரேட்ஸை பந்தாடியது தமிழ் தலைவாஸ்.

 

புரோ கபடி போட்டியின் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா பைரேட்ஸை பந்தாடியது.

புரோ கபடி தொடரின் 6-வது சீசன் ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் 12 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் புனேரி பல்தான், ஹரியாணா ஸ்டீலர்ஸ், யு மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

இதன் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி , நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்த்டில் தமிழ் தலைவாஸ் அணி , தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் 42-26 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் 14 புள்ளிகள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

Exit mobile version