பதிலடி கொடுக்கவே சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது -நிர்மலா சீதாராமன் !

ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கவே 2016-ல் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2016 -ல் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல் முக்கியமானது என்று கூறினார். இதன் 2வது ஆண்டை கொண்டாடும் வகையில் பராக்கிரம் பர்வ் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், சர்ஜிக்கல் தாக்குதலுக்கான காரணம் , எதற்காக நடத்தப்பட்டது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் விளக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

அண்டை நாட்டின் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் வந்திருக்க முடியாது என்று கூறிய அவர், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்திய ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். இதில் பயங்கரவாதிகளின் பயிற்சி தளங்கள் அழிக்கப்பட்டதாகவும், பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் அண்டை நாட்டின் போக்கிற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version