"பணம் கொடுத்தால் கூட கிடைக்காத அளவுக்கு பப்ளி சிட்டி "

தன்னுடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் பரப்பியவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வரி ஏய்ப்பு செய்ததற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த விஜய் சேதுபதி, தாம் வருமான வரியை முறையாக செலுத்தி வருவதாக குறிப்பிட்டார். ஆவணங்களை சரிபார்பதற்காக மட்டுமே வருமான வரித்துறையினர் நேற்று தனது, அலுவலகம் மற்றும் வீட்டிற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

இது குறித்து ஊடகங்களில் தவறான தகவல் பரப்பியதன் மூலம் தனது மார்கெட் அதிகரித்துள்ளதாகவும், தற்போது இதுபோன்ற சம்பவங்கள் டிரென்டாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பணம் கொடுத்தால் கூட கிடைக்காத அளவுக்கு பப்ளி சிட்டி கிடைத்துள்ளது என விஜய் சேதுபதி நகைப்புடன் தெரிவித்தார்.

Exit mobile version