நீலகிரியில் கனமழை -பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

கேரளா, கர்நாடக, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக,  நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால்,  திறக்கப்பட்டுள்ளன. உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடுங் குளிர் நிலவுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது.

Exit mobile version