நீலகிரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் இன்று ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிடுகிறார்.

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீலகிரியில் முகாமிட்டு, மழை பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களான கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிடுகிறார்.

Exit mobile version