கனமழை பாதிப்புக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும்: முதல்வர்

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த இடங்கள் பார்வையிடப்பட்டு, பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காகவே நீலகிரி சென்றதாகவும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர வேறொன்றும் தெரியாது என்றும் குற்றம்சாட்டினார்.

Exit mobile version