நீதிமன்றங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்

டெல்லியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நீதியை நிலை நாட்டுவதால தான் இந்திய நீதித்துறை உலகம் முழுவதும் மதிக்கப்படுவதாக தெரிவித்தார். இருந்த போதும் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே 58 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா முழுவதும் நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம் என்பதையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார்.

Exit mobile version