நாளை முதல் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் – செங்கோட்டையன்

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 412 நீட் தேர்வு மையங்கள் நாளை முதல் செயல்பட இருப்பதாக கூறினார். நீட் தேர்வை எத்தனை லட்சம் பேர் எழுதினாலும், அண்டை மாநிலத்திற்கு சென்று எழுத வேண்டிய நிலை இருக்காது என செங்கோட்டையன் உறுதி அளித்தார். கிராமப் பகுதிகளில் இருந்து குறைந்தது ஆயிரம் மாணவர்கள், மருத்துவ படிப்புக்கு செல்ல வேண்டும் என்பது அரசின் இலக்காக இருப்பதாக அவர் கூறினார். அரசு பள்ளி ஆசிரியர்களை சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version