திமுக ஏழை மக்களுக்கு என்ன செய்தது? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் திமுக, ஆட்சியில் இருந்தபோது ஏழை மக்களுக்கு செய்தது என்ன? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில், மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடினார். அப்போது உரையாற்றிய முதலமைச்சர், புரட்சி தலைவி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மகளிர் முன்னேற்றுத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதை குறிப்பிட்டார். அதிமுக அரசு பெண்களுக்கு வழங்கி வரும் நலத்திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நாட்டு மக்களை பற்றி சிந்திக்காமல் தனது வீட்டு மக்களை பற்றி சிந்தித்ததால் தான், மக்கள் மறந்து விட்டதாகக் கூறினார்.

 

Exit mobile version