நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வராது -ராஜ்நாத் சிங்

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என பரவலாக பேசப்பட்டு வந்தாலும் அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார். நாடாளுமன்றம் தனது முழு ஆயுள் காலத்தையும் பூர்த்தி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

Exit mobile version