நாகர்கோவில்,ஓசூரை மாநகராட்சிகளாக்கும் மசோதா நிறைவேறியது

ஒசூர், நாகர் கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட சட்ட முன்வடிவுகள் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில் புதிதாக ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்திருந்தார். இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாக்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதா இன்று குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதே போல பிளாஸ்டிக் ஒழிப்பு அபராத சட்ட மசோதா,சேலம் தலைவாசல் கால்நடை பூங்கா அமைக்கும் சட்ட முன்வடிவும் நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version