நல்ல படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்-விஜய் சேதுபதி

லெனின் பாரதி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளிவந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, படம் தயாரானதும் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை என்று கவலைத் தெரிவித்தார். எளிய மக்களுக்கான இந்த படம் பெட்டிக்குள் முடங்கி விடக்கூடாது என்று முடிவு எடுத்து, படத்தில் லாபத்தை எதிர்பார்க்காமல் வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போது, தனது கணிப்பு தவறு என்றும், நல்ல படங்களை மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்ற புரிதல் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கலை என்பது வியாபாரம் சார்ந்தது என்றும், எளிய மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இந்த தரமான படத்தை தயாரித்ததை பெருமையாக உணர்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் படத்தை தயாரித்ததால், மனம் நிறைவாக இருப்பதாகவும், வாய்ப்பு அமைந்தால் தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களை தயாரிப்பேன் என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

Exit mobile version