நடிகை சில்பா ஷெட்டியை மனம் நோகச் செய்வது நியாயமா?

ஆஸ்திரேலியா சிட்னி விமான நிலையத்தில் நிறவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டி சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் பணி புரிந்த பெண் அதிகாரி அவரை சோதனை செய்த போது ஷில்பாவின் நிறத்தை கூறி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், ஷில்பா கொண்டு வந்த பொருட்கள் அதிகமாக இருப்பதாக கூறி தடுத்ததால், ஷில்பா, தான் பிடிக்க வேண்டிய மெல்போர் விமானத்தை தவறவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி அந்த பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான நிறவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தமளிப்பதாகவும் ஷில்பா ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version