தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட மர்ம கும்பல்

காஞ்சிபுரத்தில் தொழிலதிபரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் பசூல் ரகுமான். நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம நபர்கள் சிலர், அவரை கடத்திச் சென்றனர். பின்னர் செல்போன் மூலம் பசூல் ரகுமானின் மகனை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், 50 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் மர்ம நபர்களை பிடிக்கவும், பசூல் ரகுமானை பத்திரமாக மீட்கவும் களத்தில் இறங்கினர்.

இதையறிந்து, சுதாரித்துக் கொண்ட கடத்தல் கும்பல், திருவண்ணாமலை அருகே பசூல் ரசூலை இறக்கிவிட்டு, தப்பி சென்றது. இந்தநிலையில், தொழிலதிபர் கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த, போலீசார் மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version