தொழிற் பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தார் – அமைச்சர் நிலோபர் கபில்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழிற் பயிற்சி மையங்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.

கோவை, திருச்சி, அணைகட்டி, கூடலூர், கருமந்துறை, கொல்லிமலை, ஜமுனாமரத்தூர் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், மெய்நிகர் வகுப்பறை திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் நிலோபர் கபில் இவற்றை தொடங்கி வைத்தார் .

தொழிலாளர் பயிற்சித்துறை சார்பில் 40 லட்சம் செலவில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
இணையதள மூலம் சான்றிதழ்களின் உண்மை தன்மையினை சரிபார்க்கும் திட்டத்தையும் அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.

Exit mobile version