தொழிற்சாலை காரிடாரை கோவை வரை நீட்டிக்க வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் டெல்லி சவுத் பிளாக்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.

அப்போது, அமைச்சர் வேலுமணி கடிதம் ஒன்றை அளித்தார். அதில், உலகத் தரம் வாய்ந்த நகரங்களை கட்டமைக்கும் திட்டத்தில், முதல் பத்து இடங்களுக்குள் கோவையை இணைக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அதேபோல், மும்பை – பெங்களூரு தொழில்வளாக சாலை அதாவது, இண்டஸ்டிரியல் காரிடார் திட்டத்தை கோவை வரை நீட்டிக்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் கொள்கை மற்றும் முன்னேற்ற அமைச்சகமானது இந்த இரு திட்டங்களை கையாண்டாலும், தாங்கள் தலையிட்டால், இந்த இரு திட்டங்களும் நிறைவேறும் எனவும் கடிதத்தில் அமைச்சர் வேலுமணி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version