தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுகொலை

பண்டிப்பூரா மாவட்டத்தில் உள்ள சம்ப்ளார் பகுதியில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை தீவிரவாதிகள் ஊடுருவினர். இவர்கள் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளுக்கு செல்ல முயன்றனர்.

அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்பு படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். இருதரப்பினரிடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்களை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்.

Exit mobile version