திருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது

திருப்பதி அருகே உள்ள ரங்கம்பேட்டை வனப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 10 க்கும் மேற்பட்டோர் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் நுழைய முயன்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிய போது, விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் போலீசாரிடம் பிடிபட்டார். தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version