திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக காங்கிரஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை சென்னையில் இருந்து திருநாவுக்கரசர் அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர, கேரள வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் முக்கொம்பு அணை உடைந்துள்ள நிலையில், மற்ற அணைகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நிபுணர் குழுக்களை அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்

Exit mobile version