இடைக்கால பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது

இடைக்கால பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றக்கூடாது என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இடைக்கால பட்ஜெட் என்பது 4 மாதங்களுக்கான பட்ஜெட்டாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தான் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

Exit mobile version