திமுகவை வென்று காட்டுவோம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இலங்கை போர் குற்றத்தை வைத்து திமுகவை வென்று காட்டுவோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த போரில், இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு உதவியதைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் மதுரை நடராஜ் தியேட்டர் திடலில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழர்களுக்கு எதிராக திமுக செய்த துரோகங்களின் முகத்திரையை உலகுக்கு அதிமுக அரசு வெளிச்சம் போட்டு காட்டி வருவதாகக் குறிப்பிட்டார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரின்போது, உண்ணாவிரதம் இருந்த அப்போதையை முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் போர் நின்று விட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தைக் கைவிட்டது மிகப்பெரிய துரோகம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். திமுகவின் இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், இலங்கை போர் குற்றத்தை வைத்து திமுகவை வென்று காட்டுவோம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Exit mobile version