"தினகரன் அரசியலுக்கு தகுதியற்றவர்"

 

அரசியல் வட்டாரத்தில் தனிமையில் சந்திப்பதையும், பேசுவதையும் வெளியிடுவது என்பது மனிதத் தன்மையற்றது என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மகா புஷ்கர விழாவின் நிறைவு விழா இன்று முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரை முதலமைச்சர் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் கிடையாது எனத் தெரிவித்தார். தமிழகத்தில் மீத்தேன் உள்ளிட்ட மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என ஓ.எஸ்.மணியன் குறிப்பிட்டார். தினகரன் அரசியலுக்கு தகுதியற்றவர் என்று அவர் விமர்சித்தார்.

Exit mobile version