திடீரென திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை

“இன்கிம் இன்கிம் காவாலே” பாடல் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர் நடிகை ரஷ்மிகா. அர்ஜூன் ரெட்டி படம் புகழ் விஜய் தேவரகொண்டா நடித்த “கீதா கோவிந்தம்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா நடிந்திருந்தார். இப்படத்தின் வெற்றி ரஷ்மிகாவுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும் அவரது வாழ்க்கை ஒரு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நடிகை ரஷ்மிகாவிற்கும் கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டிக்கும் நடைபெறுவதாக இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவீட்டாருக்கும் இடையே சில பிரச்சனைகள் எழுந்துள்ளதால், தனது திருமணத்தை நிறுத்த ரஷ்மிகா மிகுந்த வேதனையுடன் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த திருமணம் நடைபெறாது என வதந்திகள் வந்த நிலையில் தற்போது அது உண்மையாகிவிட்டதாக தெரிகிறது.

 

“கீதா கோவிந்தம்” திரைப்படத்தையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ரஷ்மிகா.
கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான படவாய்ப்புகள் குவிந்து வருவதால் இன்னும் சில வருடங்கள் சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

 

Exit mobile version