நிஜ வாழ்க்கையில் கைக்கோர்த்த தீபிகா படுகோன்-ரன்வீர் சிங்

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் சிறப்பாக நடைபெற்றது.

தீபிகா படுகோன் – ரன்வீர்சிங் இணைந்து நடித்து அண்மையில் வெளிவந்த ‘பத்மாவத்’ என்ற வரலாற்று பின்னணி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் முதலில் காதல் வயப்படும் இருவரும், பிறகு திருமணத் தம்பதிகளாக மாறி அரசாள்வர். இதைப்போன்று, நிஜ வாழ்விலும் எதிர்வினைகளை தாண்டி இந்த ஜோடி தம்பதிகளாகி உள்ளனர்.

இத்தாலியில் இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சிந்தூரி முறைப்படி இன்றும் திருமணம் நடைபெற உள்ளது.

தம்பதிகள் இத்தாலியில் இருந்து திரும்பியவுடன் மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. புதுமணத் தம்பதிக்கு திரைப்படத் துறையினரின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இத்தாலியில் ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் திருமணம்

Exit mobile version