தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, அவர் பிறந்த ஊரான இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த இலங்கை தமிழர்கள், கல்வித்துறையில் சிறப்பான மாற்றங்களை கொண்டு வந்து இருப்பதாக பாராட்டினர்.

இதைத் தொடர்ந்து, இதயக்கனி நாளிதழ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இந்த நிகழ்சியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். பிறந்த ஊரில் காலடி எடுத்து வைத்தது பெருமையாக உள்ளதாக கூறினார். தமிழக மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version