தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி குமரிக் கடலில் கரைக்கப்படுகிறது. தூத்துக்குடி கொண்டு வரப்பட்ட அவரது அஸ்திக்கு சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் உள்ளிட்டோரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

 

Exit mobile version