தமிழக நான்கு வழிச்சாலைகளில் 500 ஹைடெக் ஆவின் பார்லர்கள்.-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக நான்கு வழிச்சாலைகளில், 500 இடங்களில் ஹைடெக் ஆவின் பார்லர் தொடங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆவின் பால் விற்பனை தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் நான்கு வழிச்சாலைகளில் 500 இடங்களில் ஆவின் ஹைடெக் பார்லர்களை விரைவில் துவங்க உள்ளோம் என்றார் அவர்.

தமிழகத்தில் மட்டும் தான் பேச்சுரிமையும் கருத்துரிமையும் இருக்கிறது என்று தெரிவித்த அவர், அதனால்தான் கருணாஸ் மட்டுமன்றி அனைவராலும் மைக் பிடித்து பேசமுடிகிறது என்றார். வரம்பு மீறுபவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Exit mobile version