தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version