தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் -அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

தென்மேற்கு பருவமழையின் போது, 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் மழை கொட்டித் தீர்த்தது. 300 பேர் உயிரிழந்த நிலையில், 30 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது. இதன் காரணமாக வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.

இது வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் 14ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழையே பெய்யும் என்றும், அதன்பிறகு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கேரளாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version