தமிழகத்தில் மின்வெட்டு இல்லை – மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.நாமக்கல்லில் 30 லட்சம் ரூபாய் செலவில், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

மின்துறை அமைச்சர் தங்கமணி இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி, தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாக கூறினார். எதிர்க்கட்சியினர் மின்வெட்டு இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.

தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின்வெட்டு என்பதே இல்லை என்று விளக்கம் அளித்த அமைச்சர் தங்கமணி, மின்வெட்டு குறித்து உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் அளித்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாக கூறினார்.

Exit mobile version