டெல்லியில் லேசான நிலநடுக்கம்

இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி 6 ஆக பதிவாகி உள்ளது. மீரட்டிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். மீண்டும் நில நடுக்கம் ஏற்படும் என்று தகவல் பரவியதால் வெட்ட வெளிகளில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தில் வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்ததாகவும், பாதிப்பு ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version