சேந்தமங்கலத்தில் ரூ.40 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும்

தமிழக அரசு வரும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது. இதையொட்டி, தூத்துக்குடியில் மாசில்லா தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் மனித சங்கிலி நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இதை துவக்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சேந்தமங்கலத்தில் 40 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். திமுகவில் வாரிசு போட்டி உருவாகியிருப்பதால் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி என்று அவர் கூறினார்.

Exit mobile version