செங்குறாபுரம் பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்

விருதுநகர் செங்குறாபுரம் பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கத்தரிக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 30 கிலோ முதல் 40 கிலோ வரை கத்தரிக்காய் அறுவடை செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் அரசு வழங்கிய கத்தரிக்காய் நாற்றால் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிப்பதோடு தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்தனர்

Exit mobile version