சூறாவளி – சரிந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வேதனை!

அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் அடியோடு சரிந்து சேதமடைந்தாக, நெல்லை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்குறுங்குடி பகுதியில் சுமார் 3 லட்சம் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. எத்தன், சக்கை, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.

இதில், ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமடைந்ததால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version