சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம் – திருவாங்கூர் தேவசம் போர்டு எதிர்ப்பு!

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனுடன், திருவாங்கூர் தேவசம் போர்டு நாளை ஆலோசனை நடத்துகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவாதப் பொருளாகி உள்ளது.

இதற்கு கேரள அரசு வரவேற்பு தெரிவித்த நிலையில், கோயிலை பராமரிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் நாளை சந்தித்து பேச உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி அப்போது ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

Exit mobile version