சத்தியமங்கலம் அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, ஒற்றை யானை கிராமத்திற்குள் புகுந்து வீட்டின் மதில் சுவரை உடைத்து சேதப்படுத்தியதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த யானை விளை நிலங்களுக்குள் புகுந்து நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே, அட்டகாசம் செய்து வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புங்கார் காலனி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version