சகோதரியுடன் செல்போன் தகராறு- சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சிறுவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லி துவார்கா பகுதியில் உள்ள பிந்தாபூர் என்னும் இடத்தில் வசிப்பவர் ரன்பீர் சிங். இவருடைய மகன் குல்ஷன்
குல்ஷன் செல்போனுக்காக தனது சகோதரியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளான். பிறகு சகோதரியின் செல்போனை அடித்து நொறுக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.

இந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பிய குல்ஷன் வீட்டின் முன்பாக கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் வழியிலேயே அவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.சிறுவனின் தந்தை ரன்பீர் சிங் போலீசாரிடம் கூறுகையில் ‘‘குல்ஷன் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் குல்ஷன், தனது கழுத்தின் மீது துப்பாக்கியை அழுத்தி வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அவன் பயன்படுத்திய நாட்டு கைத்துப்பாக்கியும், பயன்படுத்தப்படாத 4 தோட்டாக்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Exit mobile version